ஜூலை 29, 2010 தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில் வெலிஓயா இராணுவ முகாமில் சேவையாற்றும் இராணுவ வீராங்கனையொருவர் பலியானார்.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இராணுவ வீராங்கனை
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பிபிலைப் பகுதியைச் சேர்ந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது,













