ஜூலை 28, 2010 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகத் துறை முகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் அங்கு நீர் நிரப்பும் நடவடிக்கை இடம்பெறுமென அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப்பகுதியில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.













