ஜூலை 27, 2010 கண்டிப் பிரதேசத் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி போக்குவரத்துப் பொலிசாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாகக் கண்டி தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பஸ்களுக்குத் தரிப்பிட வசதி செய்து கொடுக்கப்படாமையே இந்தப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்குக் காரணமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.













