மார்ச் 10, 2010 நபர் ஒருவரைக் கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட களுத்துறைப் பிரதேச சபைத் தலைவரை இம்மாதம் 16 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
தாக்குதலில் காயமடைந்தவர் களுத்துறை , நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.













